திங்கள், 8 நவம்பர், 2021

பிட்காயின் என்றால் என்ன. What is bitcoin in tamil.

 பிட்காயின் (Bitcoin) (எண்ணிம நாணயக் குறியீடு: BTC; ฿)

 அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் (open-source software) இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு (அல்லது கட்டச்சங்கிலி - blockchain) என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது. 



பிட்காயினை (பொது வழக்கில் உள்ள டாலர், ரூபாய் போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. 


ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப் படுவது இல்லை; கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி (blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. கட்டச்சங்கிலி என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம். இது இணையர் வலையம் (P2P network) என்ற கணினி வலையத்தில் (computer network) செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும். 


பிட்காயினைக் கண்டு பிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை.

அவரால் பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-இல் வெளியிடப் பட்டது. 


பிட்காயின், தொடரேடு அல்லது கட்டச்சங்கிலி (blockchain) என்று அழைக்கப் படும் கணினி நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டது. கட்டச்சங்கிலி பல கட்டங்களால் உருவானது. கட்டச்சங்கிலியில் உள்ள கட்டங்களை உருவாக்க சுரங்கமர்கள் (miners) என்பவர்கள் அமர்த்தப் படுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தை உருவாக்க கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப் பட்டது. அந்த பிட்காயினை வைத்துக் கொண்டு, டாலர்,ரூபாய், போன்ற பணத்தை வாங்கலாம்; மற்ற பொருட்களையும் வாங்கலாம். 


 பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge, இங்கிலாந்து) மேற்கொண்ட ஆய்வின் படி, 2017-இல் 2.9 மில்லியன் முதல் 5.8 மில்லியன் வரையிலான குறியீட்டு நாணயப் பணப்பைகள் (cryptocurrency wallet) பயன்படுத்தப் பட்டன என்றும், அவற்றில் பெரும்பான்மையானவை பிட்காயினைப் பயன்படுத்தியவை என்றும் தெரிய வந்தது. ( குறியீட்டு நாணயம் (cryptocurrency) என்பது குறியாக்கவியல் (Cryptography) முறையைப் பயன்படுத்தி உருவாக்கும் கணினிக் காசுகள் ஆகும்.) 


பிட்காயினால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிட்காயினை வைத்து நடத்தப் படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் பிட்காயின் களவுகள் ஆகியன பிட்காயினுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும். மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது.



 இருந்தாலும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் உண்மை. பிட்காயின் பல நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. பிட்காயின் முதலீடு செய்ய இங்கே  சொடுக்கவும் 


பிப்ரவரி 2019-இல் பிட்காயின் எண்ணிக்கை நிலவரம்  


• இப்போது இருக்கும் பிட்காயின்கள்: 17,554,200 


• இனி வெளிவர வேண்டிய பிட்காயின்கள்: 3,445,800 


• பிட்காயின்களின் மொத்த எண்ணிக்கை (17,554,200 + 3,445,800): 21,000,000 


• பிட்காயின் கட்டச்சங்கிலியில், ஒரு கட்டத்தில் இருக்கும் பிட்காயின்கள்: 12.5 


• ஒரு நாளில் உருவாக்கப் படும் கட்டங்கள்: 144 


• ஒரு நாளில் வெளியிடப்படும் பிட்காயின்கள் (144 * 12.5) : 1,800 


• பிட்காயின் கட்டச்சங்கிலியில் ஒரு கட்டம் செய்ய கிடைக்கும் கூலி : 12.5 பிட்காயின்கள் 


• பிட்காயின் மதிப்பு: 


• ฿1 = US$3,815.00 (03 Mar 2019 12:04 am UTC) 


• ฿1 = US$19,650.01 (15 Dec 2017)

சனி, 25 ஆகஸ்ட், 2018

ரௌத்திரம்-மூல நோய்க்கு முடிவுகட்டுவோம்

மூல நோய்க்கு முடிவுகட்டுவோம்


தமிழகத்தில், நகரங்களில் மட்டுமல்லாமல், பட்டி தொட்டியெங்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஒரு நோய் விளம்பரம் செய்யப்படுகிறது என்றால், அது ‘மூல’நோய்தான். ஆனாலும் இந்த நோய் வந்தவர்களில் அநேகம் பேர் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு, ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் ஆசனவாயில் வலி, வீக்கம், ரத்தப்போக்கு ஏற்பட்டு, சர்ஜரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். 

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் புறப்படுகின்றன. ஒன்று, மூலம் (Piles). அடுத்தது, ஆசனவாய் வெடிப்பு(Fissure). மூன்றாவது, பௌத்திரம் (Fistula). மூன்றில் முக்கியமானது மூலநோய். சாதாரணமாக, உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இவை சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதைத் தடுக்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையப்பெறவில்லை. 

இதனால் அவற்றில் சாதாரணமாகவே புவி ஈர்ப்பு விசை காரணமாக அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சமே அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இப்படியான ரத்தக் குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’ என்கிறோம். இந்த வீக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல்தான் முக்கியமான காரணம். 

மலச்சிக்கலின்போது கழிவை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். ஆண்களிடம் காணப் படும் சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூலநோய் உண்டாகிறது. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும். 

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் பரம்பரை காரணமாக  இந்த ரத்தக் குழாய்கள் துணி தைக்கும் பருத்தி நூல்போல மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். 

உடல் பருமனாக இருப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காலில் சிரை வீக்கம் (Varicose veins) உள்ளவர்கள், டிரைவர் போன்று உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், கண்டக்டர் போன்று அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள்... மூலத்தை எதிர்கொள்வோர் பட்டியலில்  முன்னணியில் இருக்கிறார்கள். மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகை உண்டு. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்திருப்பது ‘உள் மூலம்’; வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இரண்டாவதாகச் சொன்னதைக் கையால் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உள் மூலம் அப்படியில்லை. 

இது ஏற்பட்டால் என்ன நடக்கும்? மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் சொட்டுவது அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படுவது இதன் ஆரம்ப அறிகுறி.  சில வாரங்களில் அல்லது மாதங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பிறகு, ஆசன வாயில் லேசான வீக்கம் தெரியும். ஆசனவாயில் வீக்கமுற்ற ரத்தக் குழாய்கள் அங்குள்ள சதையோடு வெளியே தள்ளப்படுவதால் இந்த வீக்கம் தோன்றுகிறது. மலம் கழித்த பிறகு, இதை உள்ளே தள்ளிவிட்டால், மறைந்துவிடும். 

சிலருக்கு இந்த வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பும், வலியும் தினமும் தொல்லை தரும். இதனால் மலம் கழிக்க ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி என்று சொல்வது இதற்கு ஏகப்பொருத்தம். 

சிலருக்கு ஆசனவாயில் கண்ணாடியை வைத்துக் கீறியது போல் வெடிப்புகள் (Anal fissure) இருக்கும். அல்லது அந்த இடம் சுண்டுவிரல்கூட நுழைய முடியாதபடி சுருங்கி இருக்கும். அப்போதும் இந்த மாதிரி ஒரு கொடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும். இவர்கள் நம்பர் டூ போவதற்கே பயப்படுவார்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

சாதாரணமாக, 40 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அந்த வயதுக்காரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குடும்ப டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் பலரும் இதை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். எந்த ஒரு நோய்க்கும்  பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், மூலத்துக்கு மட்டும் எந்த டெஸ்ட்டும் தேவையில்லை! நோயாளியின் ஆசனவாயில் டாக்டர் விரலால் பரிசோதித்துப் பார்த்துத்தான் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியும். 

மூலம் இருக்கும் இடம், அளவு, நிலைமை இந்த மூன்றும் துல்லியமாகத் தெரிந்தால்தான் இதற்கு சரியான சிகிச்சையைக் கொடுக்க முடியும். அதற்கு ‘பிராக்டாஸ்கோப்’ என்ற கருவியை ஆசனவாய்க்குள் நுழைத்து மூலத்தை டாக்டர் நேரில் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சிகிச்சை!

உள் மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். மலம் கழிக்கும்போது ரத்தம் வருவது முதல் நிலை. ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றுவதும் உள்ளே மறைந்துகொள்வதும் இரண்டாம் நிலை. வீக்கம் நிரந்தரமாகிவிடுவது மூன்றாம் நிலை. வீக்கத்தில் புண், சீழ் ஏற்படுவது நான்காம் நிலை.

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் மருந்து, மாத்திரை, களிம்பு மூலமே சரி செய்துவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டால், மூலநோயும் டாட்டா சொல்லிவிடும். அடுத்தகட்ட பாதிப்பு இருந்தால் மட்டுமே பாண்டிங் (Banding), ஸ்டேப்ளர், சர்ஜரி என மற்ற சிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.

இந்த இடத்தில் நோயாளிகள் பலரும் செய்யும் தவறு ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். மலத்தில் ரத்தம் வந்தால், உடனே ‘மூலம்’ என்று சுயமாக முடிவு கட்டாதீர்கள். இதற்குப் பெருங்குடலில் ஏற்படும் புண், கேன்சர் என ஆபத்தான காரணங்களும் இருக்கலாம். சமீபத்தில் என்னிடம் ஒரு நோயாளி வந்திருந்தார். 

“எனக்கு மூலம் முத்திப்போச்சி, டாக்டர்! உள்ளூர் வைத்தியரிடம் மூணு மாசமா மருந்து சாப்பிட்டும் ரத்தம் நிக்கலே!” என்றார். அந்த ‘டாக்டர்’ அவரைப் பரிசோதிக்காமல், மலத்தில் ரத்தம் போகும் அறிகுறியை மட்டும் வைத்துக் கொண்டு ‘மூலம்’ என்று முடிவு செய்து மருந்து கொடுத்திருக்கிறார். நான் பரிசோதித்தபோது, அவருக்கு மலக்குடலில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும்தான் பார்க்கக் கூடாது. ஆசனவாய் மூலத்தை நேரில் பார்த்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும்!


ரௌத்திரம்

ஆசனவாயின் வெளிப்புறத்துக்கும் மலக்குடலுக்கும் இடையில் ஏற்படும் குகைப் பாதைக்கு பௌத்திரம் (Fistula) என்று பெயர். ஆசனவாய்க்கு அருகில் சிறிய வீக்கம் தோன்றி, அதிலிருந்து சளி போன்ற திரவம் வருடக்கணக்கில் வடிவது இதன் முக்கிய அறிகுறி. மலக்குடலுக்கும் ஆசனவாய்த் தோலுக்கும் இடையில் வெளிப்பக்கமாகச் சீழ்க்கட்டி ஏற்பட்டு, உடைவதால் இந்தப் பிரச்னை உண்டாகிறது. திரவம்/சீழ் வடியும் வரை வலி இருக்காது. 

இதன் வாய்ப்பகுதி தானாகவே மூடிக் கொள்ளும்போது, சீழ் வடிய வழியில்லாமல் வலிக்கத் தொடங்கும். பின்னொரு நாளில் மறுபடியும் சீழ் வடியும். இதில் பலரும் செய்கிற தவறு, சீழ் ஏற்படும்போது மட்டும் அதைக் கீறி எடுத்துவிட்டு, குகையைக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான். ஓபன் சர்ஜரி மூலம் இந்தக் குகையை உள்ளிருந்து மூடும்படி செய்தால்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

சிகிச்சை முறைகள்

1. சுருங்க வைத்தல்: ரத்தம் உறைய வைக்கும் மருந்தை மூலநோய் உள்ள இடத்தில் செலுத்தி, வீங்கியுள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இதன் செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவுகிறது.

2. வளையம் இடுதல்: இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக் குழாய்க்கு ரத்தம் வருவது தடைபட்டு, வீக்கம் சுருங்கி விடுகிறது. இரண்டாம்நிலை மூலநோய்க்கான சிகிச்சை இது.

3. உறைய வைத்தல்: திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால் அதில் உள்ள ரத்தக் குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இதுவும்  இரண்டாம் நிலை மூலத்துக்கு உதவுகிறது.

4. அறுவை சிகிச்சை: நாட்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் மற்றும் 3,4ம் நிலை உள் மூலத்துக்கு இது நல்ல பலன் தருகிறது.

5. கதிர்வீச்சு சிகிச்சை:  ஐ.ஆர்.சி. (IRC Infra Red Coagulation) என்ற கருவி மூலம் இது செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிர்களை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிடுவதால் வீக்கம் சுருங்கிவிடும். முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க முடியாதநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவுகிறது.

6. லேசர் சிகிச்சை: லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது இந்த சிகிச்சையின் செயல்முறை. ஆனால் இதற்கு ஆகும் பணச்செலவு அதிகம்.

7. ஸ்டேப்ளர் சிகிச்சை: ஸ்டேப்ளர் கருவி கொண்டு மூலநோயின் மேல்பகுதியை இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப் பகுதியையும் வெட்டி எடுத்து தையல் போட்டுவிடுகிறார்கள். மூலநோய் முற்றியநிலையில் உள்ளவர்களுக்கும், முதியோருக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. இதற்கான செலவும் அதிகம்தான்

8. ஆசனவாய் வெடிப்புக்குச் சிகிச்சை: நோய் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், ஆசனவாயை விரித்து விட்டாலே போதும். பாதிப்பு அதிகம் என்றால், சர்ஜரிதான் தீர்வு.

மலச்சிக்கல் தீர்வு- எனிமா, RELIFE FROM CONSTIPATION--ENIMA


மலச்சிக்கல் தீர்வு- எனிமா

எளிய மற்றும் நிரந்தர தீர்வு:{ENEMA}
1. நண்பர்களே வணக்கம். வழக்ககமாக நாம் ஏதாவது நோய்க்காக மருத்துவரிடம் செல்லும்போது எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,எவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் ஆலோசனை கூறுவார்...அல்லது நாமாகவே இவற்றைப் பற்றி விவரமாகக் கேட்போம்...
இவ்வாறு உள்ளே சாப்பிடும் உணவுக்கு ஆலோசனை கேட்கும் நோயாளிகளோ அல்லது மருத்துவர்களோ அது ஒழுங்காக ஜீரணம் ஆகி நாள்தோறும் கழிவுப்பொருள்கள் எளிதாக வெளியேறுகிறதா என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை..
மலச்சிக்கல் பெருஞ்சிக்கல் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்..

2. நமக்கு எந்த நோய் வந்திருந்தாலும் சரி..முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நமது உடல் கழிவுப் பொருளை அன்றாடம் கஷ்டமில்லாமல் ஒழுங்காக வெளியேற்றுகிறதா என்பதைத்தான்..அப்போதுதான் நீங்கள் மருத்துவத்துறையில் மருந்துகள் எடுத்தாலும் நோய் விரைவில் குணமாகும்...ஒருநாள் கூட கழிவுப் பொருட்கள் உடலில் தங்கக்கூடாது..
மேலும் மிகவும் கஷ்டப்பட்டு முக்கி மலம் கழிந்தாலும் அதுவும் மலச்சிக்கலே..தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் மலச்சிக்கல் உள்ளவர்கள் அனுபவிக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும்..Piles (மூலம்) பிரச்சினை உள்ளவர்களில் 100 க்கு 99 சதவீதம் மலச்சிக்கலால் தான் ஏற்படுகிறது..Piles முற்றினால் Surgery தான் பண்ண வேண்டும் என்று ஆங்கில மருத்துவத்தில் கூறுவார்கள்..
அதன்பிறகும் மலச்சிக்கல் தொடர்ந்தால் மீண்டும் மூலம் கண்டிப்பாக வரும்..அதனால் மூலத்திற்கு Surgery செய்வது நிரந்தரத் தீர்வல்ல...மலச்சிக்கலால் அனைத்து நோய்களும் தீவிரமடையும்..அடிக்கடி தலைவலி, அஜீரணக் கோளாறுகள், தூக்கமின்மை ,கெட்ட கனவுகள், முழங்கால் மூட்டு வலிகள் மற்றும் எண்ணற்ற நோய்களுக்கு மலச்சிக்கலே முக்கிய காரணம்..
அதனால் மலச்சிக்கல் இருந்தால் தயக்கமின்றி மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்..இதில் வெட்கப்பட எதுவுமில்லை..மேலும் ஒரு முக்கிய விஷயம்..தயவு செய்து மலச்சிக்கல் இருந்தால் அதற்கு ஆங்கில மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்..அது நாளடைவில் மலச்சிக்கலை அதிகப்படுத்திவிடும்..
முடிந்தவரை நிறைய நார்சத்துள்ள உணவுகளை உண்ணவும்..பப்பாளி மற்றும் புடலங்காய் நிறைய சாப்பிடவும்..அசைவ உணவு தவிர்க்கவும்..சிலருக்கு எந்த நார்சத்துள்ள உணவு உண்டாலும் மலச்சிக்கல் பிரச்சினை அன்றாடம் தொடர்ந்து கொண்டிருக்கும்..அப்படி கஷ்டப்படுபவர்களுக்கு என்ன செய்வது..
மலச்சிக்கல் பிரச்சினையே வராமல் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒரு எளிமையான முறை எனிமா எடுத்தலே...இதை நாம் வீட்டிலேயே பின்பற்றலாம்..எனிமா என்றால் என்ன என்று பிரசவமான பெண்கள் அறிந்திருப்பார்கள்..பிரசவ அறைக்கு செல்லும் முன் அவர்களுக்கு எனிமா கொடுத்துவிட்டுத்தான் பிரசவ அறைக்குள் கூட்டிச் செல்வார்கள்...
எனிமா என்றால் என்ன,அதன் நன்மைகள் மற்றும் உபயோகிக்கும் முறை பற்றி கீழே விளக்கியுள்ளேன்.

3. இங்கு கீழே படத்தில் உள்ளதே எனிமா பாட்டில்.இந்த பாட்டிலில் ஒரு ரப்பர் ட்யூப் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பாட்டிலில் நீர் நிரப்பி ட்யூபின் மறுமுனையை நமது ஆசனவாயில் உள்ளே செலுத்தவேண்டும்..இப்போது பாட்டிலை சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் தண்ணீர் ட்யூப் வழியாக ஆசன வாய்க்குள் செல்ல ஆரம்பிக்கும்..தண்ணீர் முழுவதும் உள்ளே சென்றவுடன் ட்யூபை எடுத்து விட்டு 5 to 7 நிமிடங்கள் கழித்து மலம் கழித்தால் அடிவயிறு முழுவதும் சுத்தமாகும்..


இந்த முறையை வீட்டிலேயே நாம் செய்துகொள்ளலாம்..தீவிர மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் எனிமா எடுக்கலாம்,இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை..இந்த எனிமா எடுப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.,கழிவுப்பொருட்கள் முழுவதும் வெளியேறுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்..
என்னிடம் வரும் மூல நோயாளிகளுக்கு முதலில் நான் பரிந்துரைப்பது எனிமா எடுப்பதையே...காய்ச்சல் இருக்கும்போது இயற்கையாகவே மலச்சிக்கல் இருக்கும்,எனிமா எடுத்தால் விரைவில் காய்ச்சல் குறையும்..இரவில் எனிமா எடுத்தால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும்..
பெண்களுக்கு மாதவிடாயின்போது அடிவயிறு அதிகமாக வலி எடுத்தால் எனிமா எடுப்பது உடனே வலியைக் குறைக்கும்..இந்த எனிமா முறையை காந்தியடிகள் முதலானோர் அன்றாடம் பயன்படுத்தியுள்ளார்கள்..இந்த எனிமா பாட்டில் சில இயற்கை மற்றும் கதர்
அங்காடிகளில் கிடைக்கும்..
இத்தகைய சிறப்புகளை கொண்ட எனிமாவை ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நோய் வந்தால் விரைவில் குணமாவதற்கும் அனைவரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...நன்றி!